இந்திய சினிமாவின் 100 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்க எடுக்கப்பட்டிருக்கும் புதிய முயற்சிதான் இந்த பாம்பே டாக்கீஸ். கரன் ஜோ ஹர், ஜோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, அனுராக் காஷ்யப் ஆகிய நான்கு இயக்குனர்களின் அரை மணி நேர (குறும்)படங்களை ஒரே பேக்கேஜாக தந்துள்ளனர். க்ளாஸ்ஸிக் சினிமா ரசிகர்களால் தவிர்க்க முடியாத படமாக இருப்பதற்கு இது ஒன்றே முக்கிய காரணமாக ஆகிப்போனது. நான்கிற்கும் தனித்தனி டைட்டில் கிடையாது. அனைத்து கதைகளுக்குமான ஒரே ஒற்றுமை 'சினிமா'.
கரன் ஜோஹர்: பாலிவுட் விக்ரமன் கரனின் 'கே' சீரிஸ் குடும்ப படங்கள் என்றாலே எனக்கு திகட்டிக்கொண்டு வரும். ஆனால் அந்த இமேஜில் இருந்து வெளிவந்து துணிச்சலாக ஒரு சப்ஜெக்டை கையிலெடுத்து இருக்கிறார். தனியார் டி.வி.யில் political analyst ஆக வேலை பார்க்கும் ரந்தீப் ஹூடாவின் மனைவி ராஜி முகர்ஜி. மும்பை மசாலா எனும் சினிமா பத்திரிகையில் வேலை செய்பவர். அங்கு புதிதாக வேலைக்கு சேரும் சகிப் அவருடன் நட்பு பாராட்டுகிறான்.
சகிப் ஒரு Gay என்பதை உணர்ந்து அவனை வெறுக்கும் ரந்தீப் ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி சகிப்பிற்கு லிப் டு லிப் அடிக்க(தியேட்டரில் யூத் கேர்ள்ஸ் பக்கமிருந்து என்னா க்ளாப்ஸ்!!) குடும்பத்தில் விரிசல். இறுதியில் ஒரு எமோஷனல் என்டிங். மூவரின் நடிப்பும் ஸோ ஹாட். ரந்தீப் ஒரு படி மேலே. 'கழுத்துல மங்கள சூத்ரம். கண்ல காம சூத்ரம்' 'Your husband kissed me last night' என ராணியை பார்த்து சகிப் பேசுமிடங்கள் செம 'கரன்'ட்.
திபாகர் பேனர்ஜி: சினிமாவில் தோற்றுப்போய் பிஸினசிலும் தடுமாறி வரும் கீழ்தட்டு நபராக நவாசுதீன் சித்திக்கி. திரைப்பட கதைகளை சொல்லி தன் செல்ல மகளை உறங்கச்செய்வது நவாசின் தலையாய கடமைகளுள் ஒன்று. பெரிய அடுக்கு மாடி குடியிருப்பில் வாட்ச்மேன் வேலை தேடி செல்கிறார். அங்கும் தோல்விதான். அருகாமையில் ரன்பீர் கபூர் பட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்க வேடிக்கை பார்க்கும் நவாஸை ஒரு சில நிமிடங்கள் நடிக்க அழைக்கின்றனர்.
'மிகப்பெரிய' வசனத்தை ஒத்திகை செய்து ஒரு வழியாக 'ஷாட் ஒகே' வாங்கிவிட்டு வீட்டிற்கு ஓடோடி வருமிவர் என்ன செய்கிறார் என்பது நெகிழ்ச்சியான கவிதை. சற்றே மெதுவாக நகரும் இக்குறும்படம் நவாசினால் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளது.
ஜோயா அக்தர்: நடுத்தர குடும்பத்தில் கண்டிப்பான தந்தையின் வாரிசாக சிறுவன் நமன். கால்பந்தில் பயிற்சி எடுக்க சொல்லி தந்தை வற்புறுத்தினாலும் இவனது நினைவு முழுக்க கத்ரினா கைப் தான். பெண்களைப்போல் உடை அணிந்து நடனமாட வேண்டும் எனும் அவனது கனவு எத்திசை நோக்கி சென்றது என்பதுதான் கதை. க்ளாமர் உடையில் குறும்பு கொப்பளிக்க நமன் காட்டும் முகபாவங்கள் அனைத்தும் சோ ச்வீட்.
அனுராக் காஷ்யப்: நான்கில் என்னுடைய பேவரிட் என்றால் அனுராக்கின் இந்த படைப்புதான். தந்தையின் இறுதி ஆசை நிறைவேற முரப்பா(குலாப் ஜாமூன் டைப்) எனும் தின்பண்டத்தை ஒரு ஜாரில் ஏந்திக்கொண்டு உ.பி.யில் ரயிலேறி மும்பை வரும் இளைஞன் விஜய்யின் கதை. அமிதாப்பின் தீவிர ரசிகரான தந்தை இடும் கட்டளை இதுதான்: 'அமிதாப் முரப்பாவை பாதி சாப்பிட்டு விட்டு தர வேண்டும். அதன் மீதியை எனக்கு கொண்டு வா'. நித்தம் அமிதாப் வீட்டு வாசலில் அவரைக்கான காத்திருக்கிறான் விஜய். தொடர்ந்து ஏமாற்றம்தான் மிச்சம்.
ஊருக்கு திரும்ப ரிட்டன் டிக்கட் எடுத்த நாள் நெருங்க நெருங்க பதட்டம் கூடுகிறது. செக்யூரிட்டி காலில் விழுந்து எப்படியேனும் காரியம் சாதிக்க முயல்பவனின் முயற்சி என்ன ஆனது என்பதை வெகு சுவாரஸ்யமாக காட்சிபடுத்தி இருக்கிறார் அனுராக். தம்மாத்தூண்டு இனிப்பு பண்டத்தை வைத்து இவ்வளவு சிறப்பாக ஒரு குறும்படம் எடுத்திருக்கும் அனுராக்..யூ ஆர் ராக்கிங் பய்யா!!
இந்நான்கு படங்களிலும் சிறப்பான நடிப்பை தந்தது விஜய் கேரக்டராக வரும் வினீத் குமார்தான். பாலிவுட் ஸ்டாரைக்காண வெவ்வேறு ஊர்களில் இருந்து மும்பைக்கு வரும் அப்பாவி ரசிகர்களின் ஏக்கத்தையும், தந்தையின் ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் எனும் பரிதவிப்பையும் வினீத் ஒவ்வொரு நொடியும் வெளிப்படுத்தும் போதெல்லாம் நாம் திரைப்படம் பார்க்கிறோம் எனும் உணர்வையே மறக்கடிக்க செய்கிறார்.
அமித் த்ரிவேதியின் இசையில் அனைத்து பாடல்களும் அட்டகாசம். முதல் குறும்படத்தில் யாசகம் கேட்கும் சிறுமி லதா மங்கேஷ்கரின் சூப்பர் ஹிட்டான 'அஜீப் தஸ்தன் ஹை யே' பாடும்போது நெஞ்சத்தை கிள்ளியதே. தியேட்டரில் அனைவரையும் வசீகரித்த இப்பாடல் இணையத்தில் ஆடியோ வடிவில் கூட கிடைக்காதது வருத்தமே. இறுதியில் சல்மான், ரன்பீர் தவிர்த்து பல்வேறு பாலிவுட் ஸ்டார்கள் 'ஓம் சாந்தி ஓம்' பாணியில் ஆடிப்பாடும் Tribute பாடல் சம்மர் தீபாவளி!! அப்பாடலைக்காண க்ளிக் செய்க: 'அப்னா பாம்பே டாக்கீஸ்'.
சினிமாவை கொண்டாடும் ரசிகனை ஆராதிக்கும் இந்த 'பாம்பே டாக்கீஸ்' பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் - Worth Watching Yaar.
.........................................................................
அனுராக் காஷ்யப்: நான்கில் என்னுடைய பேவரிட் என்றால் அனுராக்கின் இந்த படைப்புதான். தந்தையின் இறுதி ஆசை நிறைவேற முரப்பா(குலாப் ஜாமூன் டைப்) எனும் தின்பண்டத்தை ஒரு ஜாரில் ஏந்திக்கொண்டு உ.பி.யில் ரயிலேறி மும்பை வரும் இளைஞன் விஜய்யின் கதை. அமிதாப்பின் தீவிர ரசிகரான தந்தை இடும் கட்டளை இதுதான்: 'அமிதாப் முரப்பாவை பாதி சாப்பிட்டு விட்டு தர வேண்டும். அதன் மீதியை எனக்கு கொண்டு வா'. நித்தம் அமிதாப் வீட்டு வாசலில் அவரைக்கான காத்திருக்கிறான் விஜய். தொடர்ந்து ஏமாற்றம்தான் மிச்சம்.
ஊருக்கு திரும்ப ரிட்டன் டிக்கட் எடுத்த நாள் நெருங்க நெருங்க பதட்டம் கூடுகிறது. செக்யூரிட்டி காலில் விழுந்து எப்படியேனும் காரியம் சாதிக்க முயல்பவனின் முயற்சி என்ன ஆனது என்பதை வெகு சுவாரஸ்யமாக காட்சிபடுத்தி இருக்கிறார் அனுராக். தம்மாத்தூண்டு இனிப்பு பண்டத்தை வைத்து இவ்வளவு சிறப்பாக ஒரு குறும்படம் எடுத்திருக்கும் அனுராக்..யூ ஆர் ராக்கிங் பய்யா!!
இந்நான்கு படங்களிலும் சிறப்பான நடிப்பை தந்தது விஜய் கேரக்டராக வரும் வினீத் குமார்தான். பாலிவுட் ஸ்டாரைக்காண வெவ்வேறு ஊர்களில் இருந்து மும்பைக்கு வரும் அப்பாவி ரசிகர்களின் ஏக்கத்தையும், தந்தையின் ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் எனும் பரிதவிப்பையும் வினீத் ஒவ்வொரு நொடியும் வெளிப்படுத்தும் போதெல்லாம் நாம் திரைப்படம் பார்க்கிறோம் எனும் உணர்வையே மறக்கடிக்க செய்கிறார்.
அமித் த்ரிவேதியின் இசையில் அனைத்து பாடல்களும் அட்டகாசம். முதல் குறும்படத்தில் யாசகம் கேட்கும் சிறுமி லதா மங்கேஷ்கரின் சூப்பர் ஹிட்டான 'அஜீப் தஸ்தன் ஹை யே' பாடும்போது நெஞ்சத்தை கிள்ளியதே. தியேட்டரில் அனைவரையும் வசீகரித்த இப்பாடல் இணையத்தில் ஆடியோ வடிவில் கூட கிடைக்காதது வருத்தமே. இறுதியில் சல்மான், ரன்பீர் தவிர்த்து பல்வேறு பாலிவுட் ஸ்டார்கள் 'ஓம் சாந்தி ஓம்' பாணியில் ஆடிப்பாடும் Tribute பாடல் சம்மர் தீபாவளி!! அப்பாடலைக்காண க்ளிக் செய்க: 'அப்னா பாம்பே டாக்கீஸ்'.
சினிமாவை கொண்டாடும் ரசிகனை ஆராதிக்கும் இந்த 'பாம்பே டாக்கீஸ்' பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் - Worth Watching Yaar.
.........................................................................
2 comments:
திரைப்படங்களின் பாத்திரங்கள் நம் உணர்வுகளைத் தொடும்போதுதான் அது வெற்றிப்படமாகிறது.
இரண்டொரு நாளில் இணையத்தில் ஆடியோ வந்து விடும்... நன்றிகள் நான்கு...
Post a Comment