கலைஞரின் மனசாட்சி முரசொலி மாறன் என்றால் கேபிளின் மனசாட்சி சுரேகா. சென்னை பதிவர் சந்திப்புகளின் ஆஸ்தான தொகுப்பாளர். 'கேட்டால் கிடைக்கும்' மூலம் நுகர்வோர் உரிமையை கேட்டுப்பெறுபவர். நள்ளிரவில் ரேஷன் கடைப்பக்கம் மழைக்கு ஆயா ஒதுங்கினால் கூட கண்கள் சிவந்து ரேஷன் கடைக்காரர் வீட்டு அட்ரசை கூகிள் மேப்பில் தேடிப்பிடித்து ஓடுவார். " "டேய்..உன் நெஞ்சுல ஈரம் வர்ற வரைக்கும் என் காரம் குறையாதுடா" என்று அவனை தரதரவென இழுத்து வந்து அரிசி, பாமாயில் வாங்கித்தரும் கர்ணர்.
...........................................................................
புதுகை அப்துல்லா: mmadbulla.com
முதலாம் பானிபட் போரின் நான்காம் நாளில் கடைசி பதிவு எழுதியவர். மாற்றான் பட ரீமேக்கில் நடிகர் அப்பாஸுடன் ஒட்டி நடிக்க செலக்ட் ஆகி இருப்பவர். வெள்ளாவியில் வைத்து வெளுக்கப்பட்டு, வெயிலுக்கு தெரியாமல் வளர்ந்தவர். வருடா வருடம் பதிவுலக நண்பர்களுக்கு ரம்ஜான் பிரியாணி போடுவது ஸ்பெஷல். சென்ற வாரம் நடந்த இந்நிகழ்வில் சில இளம் பதிவர்களை அழைக்காமல் விட்டதன் மூலம் கணிசமான வாக்கு வங்கியை இழந்துள்ளார். அடுத்த பதிவர் சந்திப்பை அமெரிக்காவில் நடத்த முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக சொல்லி இருக்கும் தயாளர். பொதுவாழ்வில் கலப்பதற்காக கூகிள் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் எளிய ரெட் ஜெயன்ட்.
.............................................................................
பாலகணேஷ்: minnalvarigal.blogspot.com
புலவர் இராமாநுசம், சென்னையின் நம்பர் ஒன் பதிவர் மதுமதி இருக்கும் சபையில் கூட தெனாவட்டாக சட்டையின் மேல் பட்டனை கழற்றி விட்டு அமரும் பாட்சா(ஆதாரம்: மேலுள்ள படம்). லோகோ, பேனர் டிசைன் செய்யும் கலை இயக்குனர். 'லட்சுமி ஸ்டார்ட் ஆயிடு' ரஜினி போல தனது டூவிலரிடம் அடிக்கடி தனிமையில் பேசுவது வாடிக்கை. தலைவர் தம் அடிக்கையில் காதுகளில் இருந்து புகை வருவது அசத்தல். விரும்பி கேட்டால் ஸ்பெஷல் மேஜிக்கை செய்து காட்டுவார். அது என்னவெனில் ஒரு காதில் ஆர்ட்டினும், மறு காதில் அம்பும் புகைப்படலமாக வெளியேற, அந்த அம்பை அண்ணன் சுண்டிவிட்டால் ஆர்ட்டினுக்குள் புகுந்து எதிரில் நிற்பவரின் மூக்கினுள் சொருகிக்கொள்ளும். 'அது அந்தக்காலம். எட்டு வருடங்களாக புகைப்பதில்லை' என்று எழுதச்சொன்னார். எழுதி விட்டேன்.
.......................................................................
மதுமதி: madhumathi.com
"நாலு மணி நேரமா பேசி கொல்லுறீங்களே..ஒரே ஒரு மைசூர் போண்டா வாங்கி தந்தா என்ன?" என்று நான் கேட்ட ஒரே காரணத்திற்கு "நீ போண்டா திங்கறதுக்கு எல்லாம் பதிவர் சந்திப்பை மைசூர்ல நடத்த முடியாது. ஒழுங்கா வெளிய போயிடு" என்று சம்மந்தம் இல்லாமல் பேசி கொந்தளித்தவர்(ஆதாரம்: மேலுள்ள படம்). "அண்ணே ஒரு சைனா டீ" என்று அதன் பின் ஒரு மர்மக்குரல் ஒலித்து பரபரப்பை அதிகரித்தது. எப்போதெல்லாம் இவர் பேச ஆரம்பிக்கிறாரோ அப்போதெல்லாம் அனைவரும் வேறு கதை பேசும்போது ஹைவேஸில் சிக்கிய மான் போல முழிப்பார் பாவம். பதிவர் சந்திப்பு தொடர்பான பளுவை அதிகமாக சுமக்கும் சுமைதாங்கி. ஏழைகளின் தாகம் தீர்க்கும் தண்ணி டேங்கி.
.........................................................................
ஜெய்: pattikattaan.blogspot.in
பால கணேஷ் அண்ணனுக்கு அடுத்து புலவரை மதிக்காமல் கால் மேல் கால் போட்டு அமரும் நபர். பதிவர் சந்திப்பின் நிதியமைச்சர். நன்கொடை பணத்தில் இரண்டு ரூபாய் கள்ளநோட்டை அடியில் வைத்து தந்துவிட்டு ஊருக்கு திருட்டு ஷேர் ஆட்டோ ஏறிய சிராஜுதீனை அய்யனார் அருவாளுடன் ஜெமினி மேம்பாலத்தில் ஓடவிட்டு அடிக்க காத்திருப்பவர். o.bama@gmail.com பெயரில் இமெயில் போட்டு 'பதிவர் சந்திப்புக்கு நானும் வரலாமா?' என்று கேட்ட பெண் பதிவருக்கு obama@gmail.com என டைப் செய்து இவர் அளித்த பதில்: 'You are most wanted welcome'.
...............................................................................
ஆமினா: samayalexpress.blogspot.in
பதிவர் சந்திப்பின் உணவுக்கமிட்டி தலைவியாக நியமிக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தவர். இவர் சமையலின் தரத்தை பரிசோதிக்க சுற்றுவட்டாரத்தில் விசாரித்தபோது அங்கிருக்கும் ஏழு மெட்ரிக் பள்ளிகளின் நோட் புக்குகளில் லேபில் ஒட்ட இவர் செய்த பொங்கலைத்தான் தாங்கள் பயன்படுத்துவதாகவும், இது பல்லாண்டு காண்ட்ராக்ட் என்பதால் நீங்கள் கிளம்புங்கள் என்று பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் நம் நிருபர் குழுவை அடித்து அனுப்பிவிட்டனர். மேடம் செய்த சாம்பார் சாதத்தின் ஒற்றை பருக்கையை ருசி பார்த்த பாலகனின் நிலை மேலுள்ள படத்தில்.
.....................................................................................
"தொட்டுக்க மாங்கா ஊறுகா போடலாமா? தேங்கா ஊறுகா போடலாமா? என்று சீரியசாக மதுமதி பேசிக்கொண்டிருக்க "என்னய்யா இவரு காது கிட்ட வந்து கொய்யி கொய்யின்னு கத்திக்கிட்டு" என்றவாறு வேறுபக்கம் முகத்தை திருப்பியவர்(ஆதாரம்: மேலுள்ள படம்). இரண்டு கைகளையும் சேர்த்து ஏறத்தாழ 42 தவக்களைகள் கொள்ளளவு கொண்ட ஆர்ம்ஸை வைத்திருக்கும் ஆஜானுபாகர். பொட்டு வெடி சைசில் இருந்த மசால் வடையை எடுக்க பல அட்டெம்ப்ட் செய்தும் 'இந்த வடைய எவன் தொட்டாலும் வளச்சி வளச்சி அடிப்பேன் ' என்று அஞ்சாசிங்கம் சொன்னதற்காக 48 மணிநேரம் தொடர்ந்து அழுத ஈர நெஞ்சக்காரர். 'நீங்கதான் தல என் மானசீக குரு' என்று ஒரே நாளில் ஆரூர் மூனா செந்திலை கவிழ்த்து 'அமைதிப்படை' சத்யராஜ் ஆகி இருப்பவர்.
..................................................................................
43 comments:
பலரின் முகங்கள் உங்கள் மூலமாகவே அறிமுகமாகி உள்ளது. அதோடு கொடுத்துள்ள விளக்கங்களும் கல.. கல..
சூப்பர் தலைவரே!!
என்னப்பா..?எல்லாரும் டெரரா இருக்காங்க...பயமா இருக்கு!
//சென்னையில் நம்பர் 1 பதிவராக இருக்கும் மதுமதி//
சிவா..
ஏதாவது பிரச்சனைன்னா பேசி தீர்த்துக்கலாமே..
மூத்த பதிவர் புசாராவிற்கு முன்பு பட்டிக்காட்டான் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை, அவருடைய கால்களாக இருந்தாலுமே வன்மையாக கண்டிக்கிறேன்...
//மேடம் செய்த சாம்பார் சாதத்தின் ஒற்றை பருக்கையை ருசி பார்த்த பாலகனின் நிலை மேலுள்ள படத்தில்.//
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
முன்னாடியே சொல்லியிருந்தா பெட்டி அனுப்பியிருப்பேன்ல? இப்படியா டேமேஜ் பண்றது :-))))))))))
வாவ்வ்வ்வ்... எல்லா அறிமுகங்களும் அருமை!
உங்கள் எழுத்து நடை வழக்கம் போல் பெர்பெக்ட் ஷிவா... கலக்குறீங்க!
என்னையும் குறிப்பிட்டதுக்கு நன்றி!
இந்த பாட்ஷாவின் பல வருஷ மேனரிஸம் முதல்பட்டன் போடாமல் இருப்பது சிவா. வண்டியிடமும் கம்ப்யூட்டரிமும் பேசும ரஜினி மேனரிஸத்தை கவனித்ததற்கு தனி ஷொட்டு. பழைய(?) புகை மேட்டரை எழுதினதற்கு வீட்டுக்குத தனி ஆட்டோ அனுப்பிடறேன். தயாரா இரும்.
பல உண்மைகள் உங்க மூலம் வெளியாகுது.எப்ப நம்மைப்பத்தி எழுதிடுவாரோன்னு பலர் காபரா அடைந்திருப்பதாக செய்தி!கலக்கல் சிவா!
நிறைய உண்மைகள் இப்பத்தான் தெரியுது...
சபைல இழுத்துப்போட்டு குமிறிட்டையே பரட்ட.....
1.எனக்கும் ரேஷன் கடைக்கும் வரப்பு தகராறு இருக்கு, சுரேகா அண்ணன்கிட்ட புகார் குடுத்து தீர்ப்பு சொல்லச் சொல்லனும்
2. டேய் சிவா, அப்துல்லா அண்ணன் ஸ்பான்சரர்.. அவர ஏதும் தப்பா சொன்னா கொலை விழும் சாக்கிரத..., அண்ணன் அப்துல்லா வாழ்க....
3. கணேஷ் அண்ணன கிடல் பண்ணாதே, அப்புறம் உன்னை கிராபிக்ஸ் பண்ணி பதிவேத்திடுவாரு..(அப்பாடா ஐடியா குடுத்தாச்சி)
4. மதுமதி அவர்களே நம்பர் ஒன்னுக்கு!!! ட்ரீட் ஏதும்ம்ம்ம்ம்....
5. பட்டிகாட்டான்...இவன் ஒரு அப்பாவி விட்ருய்யா..., பஜ்ஜி டீ இப்படி ஏதும் வேணும்னா இவன்கிட்ட தனியா கேட்டு டீல் போட்டுக்க மச்சி...
6. ஆமினா அம்மனி சமைச்ச சாப்பார் சாதம் ஒரு பிளேட், சிவாவுக்கு பார்ர்ர்செல்ல்ல்ல்.....
7. சந்திப்பன்னிக்கி முதலுதவி பெட்டி இன்-சார்ஜ் இவருதாம்பா, பாத்து அப்புறம் அங்க அடிவாங்கிட்டு இவர்கிட்டதான் போய் மருந்து தடவனு...
Ha...ha...ha...
:)
:)
:)
//சங்கவி said...
நிறைய உண்மைகள் இப்பத்தான் தெரியுது...//
அடுத்து நீங்கதான் தலைவா.
/// Philosophy Prabhakaran said...
மூத்த பதிவர் புசாராவிற்கு முன்பு பட்டிக்காட்டான் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை, அவருடைய கால்களாக இருந்தாலுமே வன்மையாக கண்டிக்கிறேன்...//
நான் வழிமொழிகிறேன்...
////சென்னையில் நம்பர் 1 பதிவராக இருக்கும் மதுமதி//
எம்புட்டு செல்லறை வாங்குனே??? ஒழுங்கா என்னோட கமிசனை வெட்டிரு...
//வீடு சுரேஸ்குமார் said...
என்னப்பா..?எல்லாரும் டெரரா இருக்காங்க...பயமா இருக்கு!//
அப்ப நானும் ரவுடிதானா????..... எனக்குதான் இத்தன நாளா இது தெரியாம இருந்துட்டேனா???...
//சென்னை பித்தன் said...
பல உண்மைகள் உங்க மூலம் வெளியாகுது.எப்ப நம்மைப்பத்தி எழுதிடுவாரோன்னு பலர் காபரா அடைந்திருப்பதாக செய்தி!கலக்கல் சிவா! //
யூத் பதிவரை எல்லாம் சிங்கிளா தனி பதிவில எழுதுவாப்ல சிவா...( நாராயணா...நாராயணா...)
//டேய் சிவா, அப்துல்லா அண்ணன் ஸ்பான்சரர்.. அவர ஏதும் தப்பா சொன்னா கொலை விழும் சாக்கிரத..., அண்ணன் அப்துல்லா வாழ்க....//
ரெண்டு லட்சம் தர்ரன்னு சொல்லிட்டு ஏமாத்திபுட்டாரு வருங்கால பொதுப்பணித்துறை அமைச்சர் அப்துல்லா.
@ கறுவல்
நன்றி நண்பரே
//வீடு சுரேஸ்குமார் said...
என்னப்பா..?எல்லாரும் டெரரா இருக்காங்க...பயமா இருக்கு!//
எங்களுக்கு ப..ய...மே......இல்...ல.
/// NAAI-NAKKS said...
Ha...ha...ha...
:)
:)
:)//
அப்பாடா ஒரு போன் இல்ல ரிங் சத்தம் இல்ல...ஆனாலும் சிதம்பரத்துல சிரிக்கிறது சென்னைக்கி கேக்குது..... நாய்-நக்ஸ் வாழ்க.....
//மதுமதி said...
//சென்னையில் நம்பர் 1 பதிவராக இருக்கும் மதுமதி//
சிவா..
ஏதாவது பிரச்சனைன்னா பேசி தீர்த்துக்கலாமே..//
இல்லை. தீர்த்துட்டே பேசலாம்.
@ பிலாசபி
வழி வழியாக மொழிகிறேன்.
@ ஆமினா
பதிவுலகம் தப்பிச்சது...
@ பாலகணேஷ்
ஆட்டோல டிரைவரையும் போட்டு அனுப்புங்க.
@ சென்னைபித்தன்
உங்களோட 'அந்த' ரகசியம் விரைவில்.
@ நக்கீரன்
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது..
அண்ணே சிவாண்ணே செம காமெடி...
//எட்டு வருடங்களாக புகைப்பதில்லை'// நான் கேட்டேனா ...
இதில் பல காமெடிகள் நான் நேரில் இருந்துய் பார்த்தால் மிகவும் ரசிக்க முடிந்தது....
//ஆரூர் மூனா செந்திலை கவிழ்த்து 'அமைதிப்படை' சத்யராஜ் ஆகி இருப்பவர்.// ஹா ஹா ஹா
@பட்டிக்காட்டான்
//
6. ஆமினா அம்மனி சமைச்ச சாப்பார் சாதம் ஒரு பிளேட், சிவாவுக்கு பார்ர்ர்செல்ல்ல்ல்.....//
சென்னைக்கு போனதும் மொத வேலையே சிவாவை கொல்றது தான்! என்னை புகழ்ந்து பதிவு போட சொன்னா ரணகளமாக்கி வச்சுருக்கார்! க்ர்ர்ர்ர்ர்ர்
பிறவிப் பயனை அடைந்து கொண்டிருக்கிறேன்!நன்றி!!!!
காமெடி கும்மி! :D
வணக்கம் பாஸ்...
எத்தனை நல்ல போட்டோ எடுத்துருந்தாங்க
அதை போட்டுருக்கலாமே ...
சரி விடுங்க இதுலயும் நம்ம பிஞ்சு முகம் நல்லா தான் இருக்கு ,...
சென்னையின் நம்பர் ஒன் பதிவர் மதுமதி இருக்கும் சபையில் கூட தெனாவட்டாக சட்டையின் மேல் பட்டனை கழற்றி விட்டு அமரும் பாட்சா//
கணேஷ் சார் கேட்டு வாங்கிய வெகுமதி இதுதான் போல ..
நல்லா சொல்லிருக்கிங்க சந்திப்பு அன்னைக்கு நாலு ஆட்டோவுல வந்து அலப்பரைய கூட்டாம இருப்பார் என்று நம்புவோம் ..
நாலு மணி நேரமா பேசி கொல்லுறீங்களே..ஒரே ஒரு மைசூர் போண்டா வாங்கி தந்தா என்ன?//
பயங்கர டெரர் மன்னன் அண்ணன் மதுமதி ... வாழக வாழ்க ...
மைசூர் போண்டா தான் கலக்கல் ...
ஒவ்வொரு சந்திப்புக்கும் ஒவ்வொரு தொப்பியுடன் வருபவர் அண்ணன் ஜெய் ..
அதையும் நீங்கள் சொல்லாமல் விட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
நீங்கதான் தல என் மானசீக குரு' என்று ஒரே நாளில் ஆரூர் மூனா செந்திலை கவிழ்த்து 'அமைதிப்படை' சத்யராஜ் ஆகி இருப்பவர்.//
என் மானசீக குரு வுக்கு சமர்ப்பிக்கிறேன்
இரண்டு கைகளையும் சேர்த்து ஏறத்தாழ 42 தவக்களைகள் கொள்ளளவு கொண்ட ஆர்ம்ஸை வைத்திருக்கும் ஆஜானுபாகர். //
வேண்டாம் அண்ணே வலிக்குது ... அப்புறம் நான் அழுதுடுவேன் ...
பொட்டு வெடி சைசில் இருந்த மசால் வடையை எடுக்க பல அட்டெம்ப்ட் செய்தும் 'இந்த வடைய எவன் தொட்டாலும் வளச்சி வளச்சி அடிப்பேன் ' என்று அஞ்சாசிங்கம் சொன்னதற்காக 48 மணிநேரம் தொடர்ந்து அழுத ஈர நெஞ்சக்காரர்//
அது மசால் வடையா ?
உண்மையிலேயே அவரவர் முகம் இப்போதே பளிச்சுனு தெரியுதுங்க.
சிவா!
வயதில் மூத்தவனாக இருப்பது ஒரு வகையில் பாதுக்காப்பாகவே கருதுகிறேன்!இல்லையா!
அறிமுகங்கள் அருமை!
இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html
சரி.. சரி.. பீத்த, சே மூத்த பதிவர்களை பத்தி எழுதுனது போதும், யூத்துகளை பத்தியும் கொஞ்சம் எழுதுங்க...!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி.. சரி.. பீத்த, சே மூத்த பதிவர்களை பத்தி எழுதுனது போதும், யூத்துகளை பத்தியும் கொஞ்சம் எழுதுங்க...!///
உன்னை போன்ற பெத்த பதிவர்களுக்கு அனுமதி இல்லை
சிரிச்சு முடியலைப்பா...!! :)) சூப்பர்
Post a Comment