வாய்க்கொழுப்பு:
இங்கிலாந்திடம் 3 - ஆவது டெஸ்டில் இந்தியா தோற்று முடித்த சில நிமிடங்களில் தோனியை பேட்டி எடுத்தார் மண்ணின் மைந்தன் மைக்கேல் ஆதர்டன். அப்போது குத்தலான கேள்விகளால் வரம்புக்கு மீறி பேசினார் மைக்கேல் அண்ணாத்தை "நம்பர் 1 இடமும் போச்சி. இதுவரை ஒரு முறை கூட 300 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை? ஏன்?" என்று கேட்டதற்கு தோனி தனது பாணியில் பொறுமையாக பதில் அளித்தும் மேலும் சீண்டிக்கொண்டே இருந்தார் ஆதர்டன். நம்மை ஆண்ட கொழுப்பின் மிச்சமாக இருந்தது அந்த பேச்சின் உச்சம். மகனே..நீ ஆடிய காலத்தை நெனச்சிப்பாரு தம்பி. தானைத்தலைவன் மெக்ராத் உன் விக்கெட்டை சொல்லி சொல்லி எடுப்பாரே. அதெல்லாம் மறந்து போச்சா? இன்னிக்கி கைல மைக்கு கெடச்சா தோத்தவனை உன் லிமிட்டுக்கு மீறியா ரவுசு உட்ற...ராஸ்கோல்!!
............................................................................................
தமிழன்:
என் பள்ளிக்கால நண்பனான தியாகராஜன் தற்போது சென்னை கல்லூரி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்று வருகிறான். கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி ஒளி ஏற்றி சாதனை படைத்து வரும் 'வாழை' எனும் அமைப்பில் தன் பங்கை ஆற்றியுள்ளான். இன்றைய தினமலரில் வாழை குறித்த கட்டுரை வெளியானதில் மகிழ்ச்சி. அதைப்படிக்க:
வாழை - தினமலர் செய்தி
தமிழ்மீது கொண்ட பற்றினால் தியாகராஜன் எனும் தனது பெயரை ஈகை வேந்தன் என மாற்றிக்கொண்டான். 2008 ஆம் ஆண்டே வலைப்பூவை தொடங்கி ஒரு சில பதிவுகளை எழுதி இருப்பினும், கடந்த சில வருடங்களாக வலைப்பூவில் இயங்கவில்லை. தமிழ்மொழி குறித்த தேடல் இன்னும் நிறைய இருப்பதால் எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளான். வாழை அமைப்பு குறித்து ஈகைவேந்தன் எழுதிய பதிவை படிக்க:
வாழை - ஈகைவேந்தன்
.................................................................................................
தமிழன்:
என் பள்ளிக்கால நண்பனான தியாகராஜன் தற்போது சென்னை கல்லூரி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்று வருகிறான். கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி ஒளி ஏற்றி சாதனை படைத்து வரும் 'வாழை' எனும் அமைப்பில் தன் பங்கை ஆற்றியுள்ளான். இன்றைய தினமலரில் வாழை குறித்த கட்டுரை வெளியானதில் மகிழ்ச்சி. அதைப்படிக்க:
வாழை - தினமலர் செய்தி
தமிழ்மீது கொண்ட பற்றினால் தியாகராஜன் எனும் தனது பெயரை ஈகை வேந்தன் என மாற்றிக்கொண்டான். 2008 ஆம் ஆண்டே வலைப்பூவை தொடங்கி ஒரு சில பதிவுகளை எழுதி இருப்பினும், கடந்த சில வருடங்களாக வலைப்பூவில் இயங்கவில்லை. தமிழ்மொழி குறித்த தேடல் இன்னும் நிறைய இருப்பதால் எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளான். வாழை அமைப்பு குறித்து ஈகைவேந்தன் எழுதிய பதிவை படிக்க:
வாழை - ஈகைவேந்தன்
.................................................................................................
சந்தித்த வேளையில்:
சென்ற வெள்ளி அன்று ஆங்கிலப்படம் பார்க்க சத்யம் வாசலில் நின்று கொண்டிருந்த சமயம். NDTV HINDU-வில் திரை விமர்சனம் செய்யும் அனுராதா ஆனந்த் கண்ணில் பட்டார். எனக்குத்தெரிந்த பட்லர் இங்கிலீஷில் "உங்கள் நிகழ்ச்சியை அவ்வப்போது பார்த்திருக்கிறேன். CNN IBN ராஜீவ் மசந்த் போல துணிவாக நீங்கள் ஏன் படங்களை விமர்சிப்பதில்லை?" எனக்கேட்டேன். அதற்கு அவர் "இல்லையே நானும் தேவையான இடங்களில் அவ்வாறு விமர்சித்துள்ளேன். ராஜீவ் மசந்த் ஒரு பூனை. நான் பெண் புலி" என்றார். அதை நாங்கதான சொல்லணும் என்றது மனசாட்சி. இன்னும் கொஞ்சம் கிண்டினேன்.."காப்பி அடித்து எடுக்கப்படும் படங்கள் குறித்து தமிழ் மீடியாக்கள் பெரிதாக பேசுவதில்லையே?" என்றேன்.
"காப்பி அடிப்பது என்னைப்பொறுத்தமட்டில் தவறில்லை. இந்த உலகத்தில் எதுவுமே ஒரிஜினல் இல்லை. நீங்கள் கூட(ஆத்தாடி)" என்று வால்யூமை ஏற்றினார். இன்னும் கிளறினேன்: "எந்திரனுக்குப்பிறகு தமிழ் சினிமா குளோபல் மார்க்கெட்டை தொட ஆரம்பித்து விட்டதால், இன்னும் சில வருடங்களில் அயல்நாடுகளில் வெளியாகும் "சுட்ட" தமிழ் படங்களை ஒரிஜினல் படம் எடுத்தவன் பார்த்ததால் "சுட்டு" விட மாட்டானா?" எனக்கேட்டேன். அதைக்கேட்டு சிரித்த அனுராதா "எந்திரனா? its a crap (மொக்கை/ ப்ளேடு) movie. do you know? did you like it? " என்று கேட்டார். ஆமுக்கும், இல்லைக்கும் பொதுவாக தலையை ஆட்டினேன். இறுதியாக "தமிழ் சினிமாவை துணிந்து விமர்சிப்பதற்கான வாய்ப்பு நம்முடைய மீடியாக்களில் தரப்படுவது இல்லை" என்றார். "நிஜமாகவா சொல்கிறீர்கள்?" என்று அழுத்தினேன். அதே பதிலைத்தான் தந்தார்.
படத்தில் நடித்தவர்கள் பெயரையும், கதைச்சுருக்கம் சொல்வதையும் மட்டுமே இன்னும் எத்தனை ஆண்டுகள் தமிழக டி.வி.க்கள் செய்யுமோ?
அனுராதாவின் 'நந்தலாலா' விமர்சனம் பார்க்க:
.......................................................................................
நட்புக்காக: (sms)
நட்பின் மகத்துவத்தை பற்றி இதைவிட உயர்ந்த தத்துவத்தை சொல்ல முடியுமா.....
"உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்ட".
......................................................................................
குள்ளநரி கூட்டம்:
பழைய திரைப்படம் ஒன்றில் எம்.ஆர்.ராதா நடித்த காட்சி. தெருவில் ஒருவனை மக்கள் அடித்துக்கொண்டு இருப்பார்கள். அதை தடுத்து காரணம் கேட்பார் ராதா. "தீய பழக்கங்கள் சமூகத்திற்கு கேடு என்று புத்தகம் எழுதிய இவன் இன்று அதே பழக்கத்திற்கு ஆளாகிறான்" என மக்கள் சொல்ல, அதற்கு ராதா "சொன்னவன் என்ன செய்றான்னு பாக்காத. அவன் சொன்னது சரியா இல்லையான்னு மட்டும் பாரு" என்பார்.
அதுபோல, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற போராடிவரும் அன்னா ஹசாரேவை அடக்கி ஒடுக்கி, தற்போது அவர்மீது பலமுனையில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் தாக்குதல் நடத்தி இறுதியில் ஹசாரே ஒரு ஊழல் பேர்வழி என்ற முத்திரையையும் குத்தி விட்டார்கள். வயதான மனிதரை ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதி போல நடத்துகிறது மத்திய அரசு. லோக்பால் வரம்பிற்குள் அன்னா சொன்ன அனைவரும் வராதவரை சுதந்திர தின விழாக்கள் கொண்டாடி எதை கிழிக்கப்போகிறது பன்மோகன் அரசு?
.............................................................................................
எங்கேயோ கேட்ட குரல்:
நேற்று பாகிஸ்தானில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா ஒன்றில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கராச்சியில் ஒன்று கூடிய மக்கள் 5,857 பேர் ஒரே நேரத்தில் தேசிய கீதத்தை பாடியதுதான் அந்த சாதனை. இதற்கு காரணமான பாலி எனும் மவராசன் பேசியது என்னவெனில் "இதற்கு முன் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்த இந்தியர்கள் முயற்சித்தனர். 'வந்தே மாதரம்' எனும் பாடலை அவர்கள் பாடியதால் அதை தேசிய கீதமாக கருதி கின்னஸ் அமைப்பு விருது தரக்கூடாது என்று நான் போராடி வென்றேன் (இத மட்டும் கரெக்டா செய்ரீங்கடா). எனவே அவ்விருதை 5,248 பேரை திரட்டி தம் நாட்டு தேசிய கீதத்தை பாடிய பிலிப்பைன்ஸ் மக்களுக்கு தந்தனர்".
...................................................................................
தேடினேன் வந்தது:
"இந்த டி.வி.சேனல் எல்லாமே வேஸ்ட். சுதந்திர நாள்ல கூட நடிகைங்க பேட்டி போட்டு கலாச்சாரத்த சீர் அழிக்கறாங்க" என்று ஒவ்வொரு வருடமும் பலர் அங்கலாய்ப்பதுண்டு. ஆஸ்தான அறுவை சேனல்களையே பார்த்துக்கொண்டு இருப்பதற்கு பதில் ரிமோட்டை யூ தரன் போட்டு வேறு சேனல்களின் பக்கம் போனால் பல நல்ல நிகழ்ச்ச்சிகளை காணலாம் என்பதே உண்மை.
அதுபோல இன்று உருப்படியான சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. காலை 9 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் விடுதலையும் உழைப்பாளிகளும் எனும் சென்னை சார்ந்த நிகழ்ச்சியில் குப்பை அள்ளுபவர், ரிக்சா தொழிலாளி, போர்ட்டர் என பலரை பேட்டி கண்டனர். நீயா நானாவில் நல்ல தமிழில் பேசுவோருக்கும் தங்கிலீஷ் பேசுவோருக்குமான சூடான விவாதம் நடந்தது. CNN-IBN சேனலில் அவ்வப்போது ரியல் ஹீரோஸ் எனும் நிகழ்ச்சியில் சமூக சேவை செய்த பலரைப்பற்றி வெளிச்சம் போட்டு காட்டினர்.
டைம்ஸ் நவ் சேனலில் 'ஹீரோஸ்' நிகழ்ச்சியில் தேசத்திற்காக பாடுபட்ட முப்படை வீரர்களின் பேட்டி.மாலை 6.30-க்கு மக்கள் தொலைக்காட்சி 'சிறைச்சாலை' எனும் தலைப்பில் வேலூர் கோட்டையை மையமாக வைத்து சுதந்திர தினப்போராட்டம் நடந்த கதையை விவரித்து இருந்தனர். இப்படி பல அருமையான நிகழ்ச்சிகளை தந்த சேனல்களுக்கு நன்றிகள் பல.
அறிவாலயத்தில் தேசியக்கொடி மட்டும் ஏற்றினால் போதுமா கலைஞரே? பேரனின் தூங்காநகரத்தை போட்டு கல்லா கட்டிவிட்டீர்கள். என்னே உமது தேசபக்தி!!
..........................................................................
குள்ளநரி கூட்டம்:
பழைய திரைப்படம் ஒன்றில் எம்.ஆர்.ராதா நடித்த காட்சி. தெருவில் ஒருவனை மக்கள் அடித்துக்கொண்டு இருப்பார்கள். அதை தடுத்து காரணம் கேட்பார் ராதா. "தீய பழக்கங்கள் சமூகத்திற்கு கேடு என்று புத்தகம் எழுதிய இவன் இன்று அதே பழக்கத்திற்கு ஆளாகிறான்" என மக்கள் சொல்ல, அதற்கு ராதா "சொன்னவன் என்ன செய்றான்னு பாக்காத. அவன் சொன்னது சரியா இல்லையான்னு மட்டும் பாரு" என்பார்.
அதுபோல, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற போராடிவரும் அன்னா ஹசாரேவை அடக்கி ஒடுக்கி, தற்போது அவர்மீது பலமுனையில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் தாக்குதல் நடத்தி இறுதியில் ஹசாரே ஒரு ஊழல் பேர்வழி என்ற முத்திரையையும் குத்தி விட்டார்கள். வயதான மனிதரை ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதி போல நடத்துகிறது மத்திய அரசு. லோக்பால் வரம்பிற்குள் அன்னா சொன்ன அனைவரும் வராதவரை சுதந்திர தின விழாக்கள் கொண்டாடி எதை கிழிக்கப்போகிறது பன்மோகன் அரசு?
.............................................................................................
எங்கேயோ கேட்ட குரல்:
நேற்று பாகிஸ்தானில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா ஒன்றில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கராச்சியில் ஒன்று கூடிய மக்கள் 5,857 பேர் ஒரே நேரத்தில் தேசிய கீதத்தை பாடியதுதான் அந்த சாதனை. இதற்கு காரணமான பாலி எனும் மவராசன் பேசியது என்னவெனில் "இதற்கு முன் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்த இந்தியர்கள் முயற்சித்தனர். 'வந்தே மாதரம்' எனும் பாடலை அவர்கள் பாடியதால் அதை தேசிய கீதமாக கருதி கின்னஸ் அமைப்பு விருது தரக்கூடாது என்று நான் போராடி வென்றேன் (இத மட்டும் கரெக்டா செய்ரீங்கடா). எனவே அவ்விருதை 5,248 பேரை திரட்டி தம் நாட்டு தேசிய கீதத்தை பாடிய பிலிப்பைன்ஸ் மக்களுக்கு தந்தனர்".
...................................................................................
தேடினேன் வந்தது:
"இந்த டி.வி.சேனல் எல்லாமே வேஸ்ட். சுதந்திர நாள்ல கூட நடிகைங்க பேட்டி போட்டு கலாச்சாரத்த சீர் அழிக்கறாங்க" என்று ஒவ்வொரு வருடமும் பலர் அங்கலாய்ப்பதுண்டு. ஆஸ்தான அறுவை சேனல்களையே பார்த்துக்கொண்டு இருப்பதற்கு பதில் ரிமோட்டை யூ தரன் போட்டு வேறு சேனல்களின் பக்கம் போனால் பல நல்ல நிகழ்ச்ச்சிகளை காணலாம் என்பதே உண்மை.
அதுபோல இன்று உருப்படியான சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. காலை 9 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் விடுதலையும் உழைப்பாளிகளும் எனும் சென்னை சார்ந்த நிகழ்ச்சியில் குப்பை அள்ளுபவர், ரிக்சா தொழிலாளி, போர்ட்டர் என பலரை பேட்டி கண்டனர். நீயா நானாவில் நல்ல தமிழில் பேசுவோருக்கும் தங்கிலீஷ் பேசுவோருக்குமான சூடான விவாதம் நடந்தது. CNN-IBN சேனலில் அவ்வப்போது ரியல் ஹீரோஸ் எனும் நிகழ்ச்சியில் சமூக சேவை செய்த பலரைப்பற்றி வெளிச்சம் போட்டு காட்டினர்.
டைம்ஸ் நவ் சேனலில் 'ஹீரோஸ்' நிகழ்ச்சியில் தேசத்திற்காக பாடுபட்ட முப்படை வீரர்களின் பேட்டி.மாலை 6.30-க்கு மக்கள் தொலைக்காட்சி 'சிறைச்சாலை' எனும் தலைப்பில் வேலூர் கோட்டையை மையமாக வைத்து சுதந்திர தினப்போராட்டம் நடந்த கதையை விவரித்து இருந்தனர். இப்படி பல அருமையான நிகழ்ச்சிகளை தந்த சேனல்களுக்கு நன்றிகள் பல.
அறிவாலயத்தில் தேசியக்கொடி மட்டும் ஏற்றினால் போதுமா கலைஞரே? பேரனின் தூங்காநகரத்தை போட்டு கல்லா கட்டிவிட்டீர்கள். என்னே உமது தேசபக்தி!!
..........................................................................
பேய்வீடு:
தமிழன் என்பவன் எப்பேர்பட்ட சோதனையையும் தாங்கும் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் என்பதற்காக அராஜகத்தின் உச்சிக்கே சிலர் செல்வதை கண்டு இதற்கு மேலும் பொறுமையாக இருத்தல் தகுமோ? ஆம். தமிழா. இதோ உன் இதயத்தில் இடியை இறக்கும் இன்னொரு செய்தி. விரைவில் குறள் டி.வி.யை தொடங்க இருப்பதாக டி.ஆர். அறிவித்தே விட்டார். தலையை சுத்தி மயக்கம் வருமே? விடமாட்டேன். மூஞ்சில ப்ளீச் ப்ளீச்னு சோடாவை அடிச்சி எழுப்பி இன்னொரு செய்தியையும் சொல்லியே தீருவேன்.
அது என்னன்னா..மத்த டி.வி. மாதிரி "அரச்ச மாவ அரைப்போமா" நிகழ்ச்சிகள் குறள் டி.வி.யில் வராது, அசத்தலான நிகழ்ச்சிகள் மட்டுமே போடப்படும் என்று அறிவித்துள்ளார் டி.ஆர். அதாகப்பட்டது, 60% சிம்பு பற்றிய பொன்னான செய்திகளும், 40% டி.ஆரின் தத்துவங்களும் கொண்டதாக மட்டுமே இருக்குமாம் ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளும். இனி தினம் தினம் தீபாவளிதான் சாமியோ!!
யாரு தெரியுமா அப்பன்? யாரு தெரியுமா தாய்? அது கூட தெரியாம இப்படி மரம் மாதிரி வளந்து இருக்குறீங்களே....கொஞ்சம் இந்த போதிமரத்துக்கு கீழயும் உக்காந்துட்டு போங்க..அப்ப தெரியும் அப்பான்னா யாரு..அம்மான்னா யாருன்னு. (கூட்டத்துல யாருப்பா அது பச்ச சட்டை எஸ்கேப் ஆவுறது)
.................................................................
My other site:
nanbendaa.blogspot.com
................................................................
சமீபத்தில் எழுதியது:
சென்னையில் மகாகவி பாரதி
...............................................................
தமிழன் என்பவன் எப்பேர்பட்ட சோதனையையும் தாங்கும் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் என்பதற்காக அராஜகத்தின் உச்சிக்கே சிலர் செல்வதை கண்டு இதற்கு மேலும் பொறுமையாக இருத்தல் தகுமோ? ஆம். தமிழா. இதோ உன் இதயத்தில் இடியை இறக்கும் இன்னொரு செய்தி. விரைவில் குறள் டி.வி.யை தொடங்க இருப்பதாக டி.ஆர். அறிவித்தே விட்டார். தலையை சுத்தி மயக்கம் வருமே? விடமாட்டேன். மூஞ்சில ப்ளீச் ப்ளீச்னு சோடாவை அடிச்சி எழுப்பி இன்னொரு செய்தியையும் சொல்லியே தீருவேன்.
அது என்னன்னா..மத்த டி.வி. மாதிரி "அரச்ச மாவ அரைப்போமா" நிகழ்ச்சிகள் குறள் டி.வி.யில் வராது, அசத்தலான நிகழ்ச்சிகள் மட்டுமே போடப்படும் என்று அறிவித்துள்ளார் டி.ஆர். அதாகப்பட்டது, 60% சிம்பு பற்றிய பொன்னான செய்திகளும், 40% டி.ஆரின் தத்துவங்களும் கொண்டதாக மட்டுமே இருக்குமாம் ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளும். இனி தினம் தினம் தீபாவளிதான் சாமியோ!!
யாரு தெரியுமா அப்பன்? யாரு தெரியுமா தாய்? அது கூட தெரியாம இப்படி மரம் மாதிரி வளந்து இருக்குறீங்களே....கொஞ்சம் இந்த போதிமரத்துக்கு கீழயும் உக்காந்துட்டு போங்க..அப்ப தெரியும் அப்பான்னா யாரு..அம்மான்னா யாருன்னு. (கூட்டத்துல யாருப்பா அது பச்ச சட்டை எஸ்கேப் ஆவுறது)
.................................................................
My other site:
nanbendaa.blogspot.com
................................................................
சமீபத்தில் எழுதியது:
சென்னையில் மகாகவி பாரதி
...............................................................
18 comments:
அம்மாடியோவ்...என்ன ஒரு மசாலா கலவை பாஸ்!!
வாசித்தால் அதே சுகம்!!!
ஏவ்வ்!
சூப்பர்....
Nalla irukku boss...
Padathoda pera ovvoru patthikkum thalaippa vecchathu arasikkum padiyaa irukku...
Happy Independence day!!!
ஈகை வேந்தன் என்னும் தியாகராஜன் வாழையடி வாழையாக, வாழை மூலம் சாதிக்க எமது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..
//
நட்பின் மகத்துவத்தை பற்றி இதைவிட உயர்ந்த தத்துவத்தை சொல்ல முடியுமா.....
"உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்ட".
அட அட அட.........
@ மைந்தன் சிவா
மசாலா கலவை paas ஆனால் மகிழ்ச்சி மைந்தன்!
@ செங்கோவி
பசி ஏப்பமா..புளிச்ச ஏப்பமான்னு தெரியலியே...
@ கவி அழகன்
நன்றி தோழரே!
@ பாரத் பாரதி
தங்கள் செய்தியை நண்பனுடன் பகிர்ந்து விடுகிறேன் பாரதி.
@ டக்கால்டி
Thanks Dakkalti.
@ ஆமினா
இது உலகப்பொதுமொழிதானே சகோ!
ஒரு குமுதம்...விகடன் ...படித்த பீலிங்...
கலக்கல்ய்யா பகிர்வுக்கு நன்றி
@ செங்கோவி
// ஏவ்வ்! //
என்னாமா யோசிக்கிறாய்ங்க... ஏப்பமாமாம்...
நல்ல பதிவு.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com
செம மீல்ஸ்...
மத்த நடிகர்கள் என்ன செய்ய போறாங்க?
ஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா? - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்
உங்க கமெண்டும் ஓட்டும் அவசியம் சார்…
உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்
www.tamil10.com
நன்றி
Post a Comment