உலக சாதனை புரிந்த இஸ்னர் - மாஹட்
புல்தரையில் ஒரு மல்லுக்கட்டு:
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் சென்ற ஆண்டு இஸ்னர் மற்றும் மாஹட் இருவருக்கும் நடந்த முதல் சுற்று ஆட்டம் டென்னிஸ் ரசிகர்களால் மறக்க இயலாது. அதிகபட்சம் ஐந்து செட்கள் கொண்ட கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் கடுமையான ஒற்றையர் போட்டியாக இருந்தாலும் ஐந்து மணி நேரத்தை தாண்டுவது அரிது. ஆனால் இந்த இருவருக்கும் சென்ற ஆண்டு நடந்த போட்டி மொத்தம் 11 மணி மற்றும் 5 நிமிடங்கள் நடந்தது. இவர்கள் ஆடி சோர்ந்தார்களோ இல்லையோ, நேரிலும், டி.வி.யிலும் பார்த்த ரசிகர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். முதல் நான்கு செட்களை ஆளுக்கு இரண்டாக வென்றபிறகு, வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டை ஆட ஆரம்பித்தனர்.
டென்னிசில் பொதுவாக ஒரு செட்டில் 6 அல்லது 7 கேமை ஒருவர் எடுத்தாலே அந்த செட்டை வென்று விடுவார். உதாரணத்திற்கு 6-4 அல்லது 7-5. வெகு அரிதாக எப்போதாவது 10 கேம் வரை கூட ஆட்டம் நீளும். அதாவது எதிரில் ஆடும் வீரரை விட இரண்டு கேம் அதிகம் வென்றால் மட்டுமே ஆட்டம் முடிவுக்கு வரும். உதாரணம்: 10-8 அல்லது 12-10 இப்படி. விம்பிள்டனில் மட்டுமே இந்த விதி. மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளான பிரெஞ்சு ஓப்பன், ஆஸ்ட்ரேலியன் ஓப்பன்,யு.எஸ்.ஓப்பன் போன்றவற்றில் க்ளைமாக்ஸ் செட்டான ஐந்தாம் செட்டில் இரு வீரர்களும் தலா ஆறு கேம்களை வென்று சமமாக முட்டிக்கொண்டு நின்றால் (அதாவது 6-6) உடனே டை பிரேக்கர் விதி அமலுக்கு வரும். இறுதியில் 7-6 என்ற கணக்கில் யார் வெற்றி பெறுகிறாரோ அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
ஆனால் இஸ்னர் - மாஹட் மோதியது விம்பிள்டன் போட்டி என்பதால் இரண்டு கேம் வித்தியாசத்தில் வெல்பவரே வின்னர் என்று எற்றுக்கொள்ளப்படுவர் என்ற நிலை. இங்கிலாந்து நேரப்படி செவ்வாய் மாலை (22/06/11) அன்று இவர்கள் ஆட்டம்..சாரி போராட்டம் தொடங்கியது. இருள் கவ்வ துவங்கியதால் சில கேம்கள் ஆடியதும் மறுநாளைக்கு ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இப்படியே இயற்கை சதி ஒருபுறம், விடாக்கண்டன் கொடாக்கண்டான் என ஆடும் இவர்கள் மறுபுறம். ஒரு வழியாக வியாழன் மாலை 4.48 மணிக்கு ஆட்டம் முடிவுக்கு வந்தது. கடைசி செட்டை 70-68 எனும் கணக்கில் வென்றே விட்டார் இஸ்னர். டென்னிஸ் வரலாற்றில் அதிக நேரம் ஆடப்பட்ட ஆட்டம் எனும் சாதனை படைக்கப்பட்டது.
மழை, இருள், வெள்ளுடை:
விம்பிள்டன் போட்டியை நடத்துபவர்கள் சில விஷயங்களில் ஆண்டாண்டு காலமாக பிடிவாதம் பிடித்துவரும் விசயங்களில் சில: ஆட்டக்காரர்கள் வெள்ளை உடையத்தான் அணிய வேண்டும். போட்டி நடைபெறுகையில் சூரிய ஒளி மங்கத்துவங்கினால் டென்னிஸ் கோர்ட்டில் லைட் போடமாட்டார்கள். மறுநாள்தான் ஆட்டம் துவங்கப்படும். அதேபோல ஆட்டம் நடைபெறுகையில் மழை பெய்தால் மேற்கூரை வசதி கிடையாது. மழை நிற்கும்வரை ஆட்டம் தடை செய்யப்படும்.
விம்பிள்டன் சென்டர் கோர்ட்
ஆனால் இந்த குறைகள் எதுவும் மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இல்லை. ஸ்கூல் பசங்க மாதிரி வெள்ளை யூனிபார்ம் தேவை இல்லை. கலர் கலராக அசத்தலாம். விடிய விடிய லைட் வெளிச்சத்தில் ஆடலாம். மழை அடித்தாலும் கவலை இல்லை. மேற்கூரை உண்டு. இதையெல்லாம் பார்த்த விம்பிள்டன் நிர்வாகம் தனது பிடிவாதத்தில் இருந்து கீழே இறங்கி, மழை அடித்தாலும் தொடர்ந்து ஆட வசதி செய்துள்ளது(படம் மேலே).
உலகின் பணக்கார கிராண்ட் ஸ்லாம் எது என்பதில் போட்டா போட்டி நடப்பதால், ஒவ்வொரு ஆண்டும் பரிசுத்தொகையை உயர்த்திக்கொண்டே போகின்றன ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள். இவ்வாண்டு ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டதை வெல்லும் ஆட்டக்காரருக்கு கிடைக்கப்போகும் தொகை, நம் நாட்டு பணத்தில் கிட்டத்தட்ட எட்டே கால் கோடி ரூபாய். பாவம் இந்தியாவின் சானியா மிர்சா. தற்போது நடந்து வரும் விம்பிள்டன் ஒற்றையர் ஆட்டத்தின் முதல் சுற்றிலேயே தோற்று விட்டார். சோம்தேவ் எப்படியோ இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிவிட்டார்.
........................................................................
காலப்பெட்டகம்:
ஆட்டம் தொடரும்!
..........................................................................
My other site:
.........................................................................