பாயும் புலி:
.................................................
யாவரும் நலம்:
சென்ற சனிக்கிழமை சென்னை கே.கே. நகரில் நடந்தது பதிவர் சந்திப்பு. பல பிரபல பதிவர்கள் ஆஜர். இயக்குனர் சீனு ராமசாமி (தென்மேற்கு பருவக்காற்று) அவர்களுடன் உரையாடல் மற்றும் சென்னை பதிவர் குழுமம் அமைப்பது பற்றி நடந்த கூட்டத்தில், ஆரம்பம் முதல் இறுதி வரை சில பதிவர்கள் அடித்த நகைச்சுவை கமன்ட்டுகள்தான் சபையை கலக்கிக்கொண்டு இருந்தன. தன் திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் இயக்குனர். பதிவர்கள் எழுதும் திரை விமர்சனங்கள் பெரும்பாலும் நடுநிலையாக இருப்பதாக கூறினார். சிங்கப்பூர் பதிவர் ஜோசப் பால்ராஜ் அவர்கள் ஒரு நபரின் உயிர் காக்கும் இருதய அறுவை சிகிச்சைக்காக பதிவர்கள் ரூ.30 லட்சத்தை திரட்டி தந்ததை பற்றி குறிப்பிட்டார். உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
முதன் முறை உண்மைத்தமிழன் அவர்களை காணும் வாய்ப்பு கிட்டியது. அவர் எழுதிய பதிவுகள் குறித்து சில விசயங்களை கேட்டேன். அப்போது அவர் சில பதிவர்களின் வலைப்பூ பெயர்களை கேட்டு தெரிந்து கொண்டார். "என்னய்யா புதுசு, புதுசா இருக்கு..சிங்கம், புலி..இன்னும் என்னன்னவோ.." என்று புருவத்தை உயர்த்தி கேட்டார். தற்போது நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் எந்த அளவு வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது அவர் பேசும் தொனியிலேயே தெரிந்தது. சர்க்கஸ் சிங்கம் எனும் பெயரில் வலைப்பூ ஒன்றை எழுதும் பதிவர் அனைவரது கவனத்தையும் திசை திருப்பும் விதத்தில் பேசினார். இயக்குனர் சீனு ராமசாமிக்காக 100 துணை இயக்குனர்களை அழைத்து வந்து போராட்டம் செய்ய தயார் என்றார். மொத்தத்தில் சிரிப்பொலியில் களை கட்ட ஆரம்பித்த மீட்டிங் இறுதி வரை சுருதி குறையாமல் தொடர்ந்தது. சென்னை புத்தக கண்காட்சியில் நடந்த சந்திப்பிற்கு பிறகு நடந்த நிறைவான சந்திப்பாக இதுவும் அமைந்தது மகிழ்ச்சியே!
சந்திப்பு நடந்த டிஸ்கவரி புக் பேலஸில் பதிவர்களுக்காக சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்கள் தரப்படும் எனக்கூறினர்.
முகவரி:
டிஸ்கவரி புக் பேலஸ்
6, முனுசாமி சாலை
முதல் மாடி, மேற்கு கே.கே.நகர்
முதல் மாடி, மேற்கு கே.கே.நகர்
(பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)
சென்னை - 78
......................................................
பொக்கிஷம்:
கிழக்கு பதிப்பகம் நம் அறிவுத்தேடலுக்கு மேலும் ஒரு வசதியை செய்து தந்துள்ளது. தமிழ்நாட்டில் ஐநூறுக்கும் மேற்பட்ட புத்தகக்கண்காட்சிகளை நடத்தியுள்ளது இம்முன்னணி பதிப்பகம். அலுவலகங்கள், அபார்ட்மென்ட், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் கண்காட்சி நடத்த விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்பேட்டை,
சென்னை - 18.
போன்: 044 4200 9601.
செல்: +91 95000 45611 (ஹரன் பிரசன்னா).
www.nhm.in email: support@nhm.in
........................................................
போக்கிரி ராஜா:
போக்கிரி ராஜா:
சமீபத்தில் வந்த செய்தி. கச்சத்தீவு அருகே எண்ணை நிறுவனம் அமைக்க இங்கிலாந்துடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளதாம். இந்த செய்தி மக்கள் தொலைக்காட்சியில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பினர். இதன் மூலம் தமிழகம் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் என்று கூறினர். அதே நேரத்தில்தான் மயிர் கூச்செறியும் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி இருந்தது. நாளை முழுக்க ஊடகம் மற்றும் மொத்த நாட்டிலும் ஆட்டம் TIE ஆனதுதான் தலைப்பு செய்தியாக இருக்கும். எத்தனை தமிழன் DIE ஆனா நமக்கென்னன்னு....நடத்துங்க உங்க வியாபரத்த!
..........................................................தாயே நீயே துணை!
மனதை கவர்ந்த டி சர்ட் வாசகம்:
..................................................
மதராசப்பட்டினம்:
சென்ற வாரம் சைதையில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் கட்டிடத்தை திறந்து வைக்க முதல்வர் வந்திருந்தார். அவரை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பேனர்களில் இருந்த வாசகங்கள்:
"புதியதாக கட்டப்பட்டுள்ள புதுக்கட்டிடத்தை திறக்க வரும்.."
"ஓய்வரியா சூரியனே"
உடன்பிறப்புக்களே, பிழை சரி செய்ய சீக்கிரம் குழு ஒன்றை அமையுங்க.
.....................................................
கற்றது தமிழ்:
அம்மா பிறந்த நாளை முன்னிட்டு வீட்டருகே வைக்கப்பட்ட பேனரில்:
அன்பின் ஆருயிரே
ஆற்றல் உள்ள சிங்கமே
இனிய உள்ளம் கொண்ட புதுமையே
ஈகைப்பண்பு கொண்ட தங்கமே
உள்ளம் எங்கும் உதவும் எண்ணம் கொண்ட பதுமையே
ஊக்கம் தரும் உற்சாகமே
எழுச்சிமிகு நாயகியே
ஏற்றம் தரும் சீற்றமே
ஐக்கியம் ஆனவர்களை அரவணைக்கும் தாயே
ஒப்பிலா சிகரமே
ஓடி வந்து உதவும் உன்னதமே
ஒளவையார் வழிநடக்கும் தாரகையே
எஃகு போன்ற உறுதி கொண்ட தாயே
என்னா எமோசன்ரா....ங்கப்பா!
..................................................
எந்திரன்:
கெட் ரெடி போல்க்ஸ்! மார்ச் 1 ஆம் தேதி தமிழ்நாட்டு தேர்தல் தேதிய அறிவிக்க போறங்களாம். நம் எந்திரர்கள் படை தயாராகட்டும். ஓட்டு போட்டு மேலும் பல கோடீஸ்வரர்களை உருவாக்க வேண்டாம்? அப்புறம் எப்புடி வல்லரசு ஆகுறது.
..........................................................
வரவு எட்டணா. செலவு பத்தணா
.............................................................
வரவு எட்டணா. செலவு பத்தணா
திங்கள் காலை இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பற்றி சொல்லப்போகுது மத்திய அரசு. பெரிய பெரிய லட்டுகளை பல பெருச்சாளிகள் முழுங்கியது போக மிச்சம் உள்ள பூந்திய வச்சி நெல்லிக்கா சைசில் நமக்கு தக்குனூன்டு லட்டு தருவாங்க. 120+ கோடி பேரும் அடிச்சிக்காம சாப்புடனும். ஓக்கே? நீங்க சும்மா இருந்தாலும் ஓக்கேதான். அவங்க முடிவு பண்ணியாச்சி!
தலைவன் இருக்கின்றான்:
உலக கோப்பை பாக்குறது தப்பில்ல. ஆனா அதுக்காக சோறு கூட திங்காம பிரம்மரிஷி மாதிரி டி.வி. முன்னாடி தவம் இருந்து பாக்குறது தப்புதான. அப்படிப்பட்ட கிரிக்கெட் ரசிகர்களுக்கு தலைவர் சொன்ன கலக்கல் கம்மன்ட்:
யூ ட்யூப்பில் பார்க்க: http://www.youtube.com/watch?v=tf47C60dcHI
...........................................................