ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற சோம்தேவ், சற்று முன் நடந்த ஒற்றையர் இறுதி போட்டியிலும் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். உஸ்பெகிஸ்தானை சேர்ந்த டெனிஸ் இச்டோமின்னை 6-1 6-2 எனும் நேர் செட்டில் துவம்சம் செய்து வென்றார் சோம்தேவ். உலக தர வரிசையில் 40-வது இடத்தில் இருக்கும் டெனிஸ், 94-வது இடத்தில் இருக்கும் நம் சிங்கக்குட்டி சோம்தேவ்வின் ஆட்டத்திற்கு ஈடு குடுக்க இயலாத கோபத்தில் பலமுறை மட்டையை தரையில் வீசி உரக்க கத்தினார். அந்தோ பரிதாபம். டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பல ஆண்டு காலம் சோபிக்காமல் இருக்கும் இந்தியாவிற்கு பெரும் நம்பிக்கை நட்சத்திரமாக தோன்றியுள்ள இந்த இளம் வீரரை வாழ்த்துவோம்!
ராக்கெட் ராஜா!
நேற்று தங்கம் வென்ற சனம்,சோம்தேவ்!
வெற்றிக்கொடி கட்டு...!
டென்ஷன் மன்னன் டெனிஸ்!
..........................................................................
என் மற்றொரு பதிவகம்:
nanbendaa.blogspot.com
என் ட்விட்டர் ஐ.டி. nanbanshiva
..........................................................................
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites
1 comments:
மெட்ராஸ் மின்னல் என்ற பெயரில் எனக்கு பின்னூட்டமிட்டது நீங்கள் தானே...
படித்தேன்... நன்றி...
நான் முன்னர் குறிப்பிட்டது போல படங்களை குறைத்து அதிகம் எழுதுங்கள்... சீக்கிரமே முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்...
Post a Comment