>>> சிறந்த ஒளிப்பதிவாளர்: நீரவ் ஷா
தமிழ்படம், மதராசபட்டினம் மற்று 'வ' என வெவ்வேறு சவாலான களங்களை தேர்வு செய்து சிறப்பான ஒளிப்பதிவின் மூலம் பாராட்டுக்களை பெற்றார் நீரவ் . மதராசபட்டினம் படத்தில் சென்ட்ரல் நிலையம் உள்ளே ஆர்யா மற்றும் எமியை ஆங்கிலேயர்கள் தேடும் காட்சியை மிக நன்றாக படம் பிடித்து இருந்தார் எனலாம்.
>>> சிறந்த அறிமுக ஒளிப்பதிவாளர்: ரிச்சர்ட் மரியநாதன்
"நான் 18 வயது இருக்கையில் முதன் முறை ரங்கநாதன் தெருவிற்கு சென்றேன். ஜன நெரிசலை பார்த்து, இனி அந்த பக்கமே செல்லக்கூடாது என முடிவு செய்தேன்" என்று சொன்ன ரிச்சர்டின் முதல் படமே ரங்கநாதன் தெருவை மையமாக கொண்ட 'அங்காடித்தெரு' படமாக அமைந்து விட்டது. பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்திடம் உதவியாளராக சிவாஜி, செல்லமே போன்ற படங்களில் பணி செய்தவர் இவர். 25 கிலோ எடை கொண்ட கேமராவை தோளில் சுமந்து கொண்டு 100 நாட்களுக்கும் மேலாக ரங்கநாதன் தெருவின் இயல்பு நிலையை படம் பிடித்திருக்கிறார். பானா காத்தாடியும் இவர் ஒளிப்பதிவு செய்த படமே. தன் குரு ஆனந்தின் இயக்கத்தில் 'கோ' படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் நம்பிக்கை தரும் நாளைய 'ஒளிவிளக்கு' ரிச்சர்ட்.
>>> சிறந்த அறிமுக வில்லன்: திருமுருகன்
துணை இயக்குனராக திரை உலகில் பயணம் செய்து கொண்டிருந்த இவர், 'களவாணி' பட இயக்குனர் சற்குணத்தின் கோரிக்கையை ஏற்று வில்லனாக திரையில் தோன்றினார். ஆரம்ப காட்சியே அதிரடியாக இருந்தது. வழக்கமான வில்லன்களை போல இல்லாமல் கதையை ஒட்டி நடிப்புத்திறனை கூடுமானவரை நன்றாகவே வெளிப்படுத்தி இருந்தார் என எண்ணுகிறேன். அடுத்து வசந்தபாலனின் அரவான் படத்தில் முக்கிய வேடத்திலும், மற்றொரு படத்தில் நாயகனாகவும் நடிக்கவிருக்கிறார். அதே நேரத்தில் இயக்குனராக அடுத்த வருடம் அறிமுகம் ஆவேன் என்று திண்ணமாக கூறுகிறார் திருமுருகன்.
>>> சிறந்த கலை இயக்குனர் வி.செல்வகுமார்
புராதன சென்னையின் அழகை புகைப்பட கண்காட்சிகள் மட்டுமே பார்த்து வந்த நமக்கு அதை திரைவடிவில் கொண்டு வந்த செல்வகுமார் அவர்களின் பங்கு இத்திரைப்படத்தில் மிக முக்கியமானது. இயற்கை, ஈ, பேராண்மை படங்களை தொடர்ந்து இவருக்கு பெயர் சொல்லும்படி அமைந்தது 'மதராசபட்டினம்'.
>>> சிறந்த திரைக்கதை மற்றும் அறிமுக இயக்குனர் : சற்குணம்
கதை மற்றும் கதாநாயகனின் பாத்திரம் போன்றவை எதுவும் புதிதாக இல்லாவிடினும், திரைக்கதையின் மூலம் 'களவாணி'யை சுவாரஸ்யமான கோர்வைகளுடன் நகர்த்தி இருந்தார் சற்குணம். வெட்டி ஹீரோ பள்ளி செல்லும் பெண்ணை காதலித்தல், ஒரு தரப்பு மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்தது என்னவோ உண்மை. அதற்கு சற்குணத்தின் விளக்கம் என்னவென்று தெரியவில்லை. மற்றபடி, பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வசூலையும், ஊடகங்களின் பாராட்டையும் பெற்றது 'களவாணி'. இதே அணியை கொண்டு அடுத்த படத்தை இயக்க உள்ளார் சற்குணம் என்பது செய்தி.
.....................................................................................பாகம் - 5 விரைவில்...
முந்தைய பதிவுகளை படிக்க:
பாகம் - 1
பாகம் - 2
பாகம் - 3
.............................
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.
என் மற்றொரு பதிவகம்.. nanbendaa.blogspot.com







6 comments:
நல்ல பகிர்வு நண்பா
ஆர்வத்துடன் , இன்வால்வ் ஆகி பதிவிட்டு இருக்கிறீர்கள்.. சூப்பர்
>>> இரவுவானம் மற்றும் பார்வையாளன்....வாசித்தமைக்கு நன்றி!
நல்ல தேர்வுகள் :)
Thank you karthik!!
nandru!!!!
Post a Comment